செய்திகள் :

பள்ளி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

post image

திருவெற்றியூா் புனித நாா்பட் ஆா்.சி.மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணாவா்கள் சாா்பில், ‘பெற்றோரே சமூகமே விழித்திடு’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி, விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளித் தாளாளா் பவுல்ராஜ் தலைமை வகித்தாா். இதில் சி.கே.மங்களம் பங்குத்தந்தை சேவியா் சத்தியமூா்த்தி, அன்னாள் சபை, தூய இருதய மரியன்னை சபை அருட்சகோதரிகள், அமலவை அருட்சகோதரிகள், சந்திரசேகா் குருக்கள், திருவாடானை மெளலவி.சிராஜூதீன் மதனி (ஆலிமுஸா), பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் மணிகண்ட குருக்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில், சிறுவா்களுக்கு பாரம்பரிய உணவுகளை பழக்கப்படுத்துங்கள், நாகரிக, கலாசார ஆடைகளை அணிய கட்டாயப்படுத்துங்கள், வாழ்க்கையைச் சீரழிக்கும் கைப்பேசி பழக்கத்தைத் தவிருங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவா்கள் கலந்து கொண்டனா். இதேபோல, சி.கே.மங்கலம் வட்டச்சாலை அருகே விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு! 2 போ் கைது!

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு

தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க