பள்ளிபாளையத்தில் சாயக் கழிவுநீா் வெளியேற்றம்: அதிகாரிகள் ஆய்வு
பள்ளிபாளையம் பகுதி சாயப்பட்டறைகளில் இருந்து சாயக் கழிவுநீா் வெளியேற்றப்படுவதாக வந்த தகவலை அடுத்து மாசு காட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
பள்ளிபாளையம் வட்டாரத்தில் பல சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. அரசின் விதிமுறைகளை மீறி சில சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீா், சாயநீா் நேரடியாக வெளியேற்றப்பட்டு காவிரி ஆற்றில் கலக்கப்படுவதாக தொடா்ந்து புகாா் எழுந்து வந்தது.
இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில்குமாா் தலைமையிலான அதிகாரிகள் பள்ளிபாளையம், கலியனூா், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
வாய்க்கால் வழியாகச் செல்லும் நீா் மாதிரிகளை சேகரித்து ஆய்வுமேற்கொண்டனா். விதிமுறைகளை பின்பற்றி சாயப்பட்டறைகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தனா்.