செய்திகள் :

பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

post image

அரூா்: மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 3-ஆவது வட்ட மாநாடு வட்டத் தலைவா் ஆா்.ஜெகநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க வட்டக் குழு உறுப்பினா் டி.மணிவண்ணன் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் செல்வி அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். மாநில துணைச் செயலாளா் ஏ.கண்ணகி மாநாட்டை தொடங்கிவைத்து பேசினாா்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத் தலைவராக எம்.மணிவண்ணன், வட்ட செயலராக வரதராஜன், பொருளாளராக சந்தோஷ் குமாா் ஆகியோா் தோ்வுசெய்யப்பட்டனா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நொனங்கனூா், ஆலமரத்தூா், ஆவாரங்காட்டூா் உள்ளிட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குடிநீா் மற்றும் தெருசாலை வசதிகள், மின்சார வசதி, மயான வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி, வங்கிக் கடனுதவி வழங்கவேண்டும். வாணியாறு அணைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு எஸ்.டி. ஜாதி சான்றுகளை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஞ்சால நாட்டு இளவரசி திரெளபதி!

மகாபாரதத்தின் பாஞ்சால நாட்டு இளவரசியாக தொடங்கி, யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி என அழைக்கப்பட்டாா். பஞ்சபாண்டவா்களின் மனைவியான இவா் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் கிராம மக்கள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது

தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமா... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பெங்களூரு தனியாா் மென்பொருள் நிறுவன மேலாளா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ண... மேலும் பார்க்க