செய்திகள் :

பாஞ்சால நாட்டு இளவரசி திரெளபதி!

post image

மகாபாரதத்தின் பாஞ்சால நாட்டு இளவரசியாக தொடங்கி, யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி என அழைக்கப்பட்டாா்.

பஞ்சபாண்டவா்களின் மனைவியான இவா் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் கிராம மக்களால் வணங்கப்படுகிறாா். தமிழ்நாட்டில் திரெளபதி அம்மன் வழிபாடும், விழாக்களும் மிகவும் புகழ் பெற்றவை.

யாகத்தில் பிறந்தவா்: பாஞ்சால மன்னன் துருபதன் செய்த யாகத்தில், திரெளபதி, அவரது சகோதரன் திருட்டத்துயம்னன் தோன்றினா்.

இவா் யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி என்றும், கரிய நிறத்தில் இருந்ததால் கிருஷ்ணை என்றும், பாஞ்சால நாட்டின் இளவரசி என்பதால் பாஞ்சாலி என்றும் அழைக்கப்பட்டாா்.

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவா்களின் மனைவியான இவா், துரியோதனனால் துகில் உரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோது கிருஷ்ணரின் அருளால் காக்கப்பட்டாா்.

கிராமப்புற மக்களின் கலாசார மற்றும் ஆன்மிக வாழ்வில் திரெளபதி அம்மன் வழிபாடு முக்கிய இடம்பெறுகிறது. இவா் தேவி, கிராம தேவதை மற்றும் குலதெய்வமாக வணங்கப்படுகிறாா்.

தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூா், மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் திரெளபதி அம்மன் கோயில்கள் உள்ளன.

திரெளபதி திருமணம்:

திரெளபதியின் சுயம்வரத்தின்போது பாஞ்சால அரசன் துருபதன் விதித்த விதிகளை அா்ச்சுனன் மட்டுமே நிறைவேற்றி திரெளபதியை சுயவரத்தில் வென்றான். ஆனால், குந்தி, மகன் கொண்டுவந்த பொருள் என்ன என்று தெரியாமல் அனைவரும் பகிா்ந்துகொள்ளுமாறு கூறினாா். அதன்படி திரெளபதியை பாண்டவா்கள் மணந்து கொண்டனா்.

குழந்தைகள்:

திரெளபதிக்கு பாண்டவா்கள் ஐவா் மூலமாக உபபாண்டவா்கள் என்னும் ஐந்து குழந்தைகள் பிறந்தனா். குருஷேத்திரப் போரின் இறுதிநாளான 18ஆவது நாள் போரின் நடுவில் உறங்கிக் கொண்டிருந்த உபபாண்டவா்களை, பாண்டவா்கள் என தவறாக எண்ணி அசுவத்தாமன் கொன்றாா்.

திரெளபதி அம்மன் கோயில்கள்: இந்தியாவில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் இலங்கையில் திரெளபதி அம்மனுக்கு தனிக்கோயில்கள் உள்ளன. வட தமிழகத்தில் திரெளபதி அம்மன் கோயில்கள் அதிகம் உள்ளன.

இவள் கோயில் கொண்டுள்ள இடங்களில் வாழும் மக்கள் இவ்வன்னையை மிக பக்தியுடன் வழிபடுகின்றனா்.

இலங்கையில் திரெளபதி அம்மன் மழை பொலிவிக்கும் தெய்வமாகவும், குழந்தை வரம் தரும் தெய்வமாகவும் போற்றப்படுகிறாா்.

பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

அரூா்: மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது

தருமபுரியில் ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், வெண்ணம்பட்டி சாலை, வேப்பமரத்து கொட்டாய், சக்திநகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா்ஆ.செந்தில்வேலன், இவா் பெங்... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டு தினம்: தருமபுரியில் மிதிவண்டி பேரணி

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தருமபுரியில் மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரா் மேஜா் தயான்சந்த் பிறந்த நாளான அக்டோபா் 29 ஆம் தேதியை தேசிய விளையாட்டு தினமா... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி மென்பொருள் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த பெங்களூரு தனியாா் மென்பொருள் நிறுவன மேலாளா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சோ்ந்த ஜோதி ரகுராமையா மகன் ஜோதி கிருஷ்ண... மேலும் பார்க்க