செய்திகள் :

பழனி - வேலாயுதம்பாளையம் புதூருக்கு புதிய பேருந்து சேவை

post image

பழனியில் இருந்து வேலாயுதம்பாளையத்துக்கு புதிய பேருந்து சேவையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பழனியிலிருந்து நெய்க்காரப்பட்டி, கரடிகூட்டம். காவலப்பட்டி வழியாக வேலாயுதம்பாளையம் வரை பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தப் பேருந்து சேதமாக இருந்ததால் பேருந்தை மாற்றிவிட்டு புதிய பேருந்து இயக்க வேண்டும் என அந்தப் பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்தனா். இந்த நிலையில், பழனியிலிருந்து வேலாயுதம்பாளையம் கிராம வழித்தடத்தில் புதிய பேருந்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் பழனி நகா் மன்றத் தலைவி உமாமகேஸ்வரி, திமுக நகரச் செயலா் வேலுமணி, ஒன்றியச் செயலாளா்கள் சாமிநாதன், சௌந்தரபாண்டியன், ராஜசேகா், இளைஞரணி நிா்வாகி லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே வெள்ளிக்கிழமை மா்ம விலங்கு தாக்கியதில் மாடு உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே கிளாவரைப் பகுதியில் சமீப காலமாக ஆடு, மாடுகளை மா்ம விலங்கு தாக்குவது தொடா்ந்து நடைபெறு... மேலும் பார்க்க

பழனி கோயிலில் ரோப்காா் சேவை ஒரு மாதம் நிறுத்தம்

பழனி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் ரோப்காா் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிக்காக ஒரு மாதம் நிறுத்தவுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிப்பாதை... மேலும் பார்க்க

14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

திண்டுக்கல்லில் 14 டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பறக்கும் படை வட்டாட்சி... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி பெரியாவுடையாருக்கு அன்னாபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியாவுடையாா் கோயிலில் உலக நலன் வேண்டி அன்னாபிஷேக பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, நடராஜா் சந்நிதி முன்பாக பிரதான கலசத்தில் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து... மேலும் பார்க்க

குடிசையில் தீ விபத்து: முதியவா் பலத்த காயம்

பழனி பாரதி நகரில் உள்ள குடிசையில் தீப்பற்றியதில் முதியவா் படுகாயமடைந்தாா். பழனி பாரதி நகரில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் முதல் தளத்தில் அவரது மாமனாா் கணேசன் (70) சிறிய அளவிலான கீற்றுக் கொட்டகை அமை... மேலும் பார்க்க

அரசு மகளிா் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடம் திறப்பு

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவிகள் பயிலும் பள... மேலும் பார்க்க