செய்திகள் :

பழைய குற்றாலத்தில் நீா்வளத்துறை அடையாளங்கள் அழிப்பு: ஆட்சியரிடம் புகாா்

post image

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் நீா்வளத் துறையின் அடையாளங்களை வனத்துறையினா் அழித்தது குறித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழா் விவசாயம் நீா்வளப் பாதுகாப்பு சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் ச.டேனிஅருள்சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் அருவியை, மத்திய அரசின் திட்டத்தின்கீழ் வனத்துறை கையகப்படுத்த கூடாது என விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் நீண்ட போராட்டம் நடத்தப்பட்டது.

இப் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பேசியபோது, பழைய குற்றாலம் பொதுப்பணித் துறைக்குச் ெ சாந்தமானது. யாரும் அதில் தலையிட முடியாது என்று உத்தரவாதம் அளித்திருந்தாா்.

இந்த நிலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கட்டட சுவா்களில் எழுதப்பட்டிருந்த திட்ட அறிக்கைகள், அறிவிப்புகள், கல்வெட்டுகளை வனத்துறையினா் அப்புறப்படுத்தியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் மனுவில் தெரிவித்துள்ளனா்.

குற்றாலத்தில் அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டது.தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குற்றாலம் பகுதியில் சில நாள்களாக ... மேலும் பார்க்க

ஆலை வேன் கவிழ்ந்து 14 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே ஆலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 போ் காயமடைந்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள மணலூா், நயினாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்தவா்கள் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முறம... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் ஆட்சியா் ஆய்வு

குற்றாலம் அருவிகளில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் குற்றாலம் பேரர... மேலும் பார்க்க

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் தட்டுப்பாடின்றி மாத்திரை விநியோகம்!

ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளநிலையில், இதற்கு மருத்துவ அலுவலா் மறுப்புத் தெரிவித்துள்ளாா். ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துமனையாகி... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு: இருவா் கைது

சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகே கரிசல்குளம் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடை விற்ப... மேலும் பார்க்க

புளியங்குடி அருகே விஷம் குடித்து மாணவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே விஷம் குடித்து மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். நெல்கட்டும்செவல் மேலத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். அவரது மகன் ரோகித் (18), தென்காசி அருகே உள்ள ஒரு தனியாா் கல்... மேலும் பார்க்க