செய்திகள் :

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது; காரணம் என்ன?

post image

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடரின் முதல் போட்டி நாளை (மே 28) லாகூரில் உள்ள கடாஃபி திடலில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: ஐபிஎல் இறுதிப்போட்டியில் பங்கேற்க முப்படை தளபதிகளுக்கு பிசிசிஐ அழைப்பு!

இந்த நிலையில், பொருளாதார சூழல்களைக் கருத்தில்கொண்டு வங்கதேசத்துக்கு எதிரான இந்த டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தானின் நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், அது ஒளிபரப்பாளர்களுக்கு பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், இந்த தொடரில் நடுவர்களின் தீர்ப்பை மேல்முறையீடு செய்து மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடரில் வங்கதேசத்தின் முக்கியமான வீரர்கள் விளையாடமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடியபோது, காயம் ஏற்பட்டதால் வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: நாங்கள் இதுவரை எதையும் சாதிக்கவில்லை: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு வீரர்கள் மட்டுமின்றி, வங்கதேச அணியின் உதவிப் பணியாளர்களும் இந்த தொடருக்கு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழலுக்குப் பிறகு, மீண்டும் தொடங்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள்: முன்னாள் ஆஸி. கேப்டன்

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீ... மேலும் பார்க்க

இங்கிலாந்தில் காத்திருக்கும் சவாலை இளம் இந்திய அணி சமாளிக்குமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்து புஜாரா பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், கடந்த இரண்ட... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: 170 ரன்கள் விளாசி கீஸி கார்ட்டி அபாரம்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மட்டும் கடைசி ஒருநாள் போட்டியில் கீஸி கார்ட்டியின் அபார சதத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 385 ரன்கள் குவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க

முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம... மேலும் பார்க்க

ஜிம்பாப்வே டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய சோயப் பஷீர்; இங்கிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க