செய்திகள் :

இங்கிலாந்தில் காத்திருக்கும் சவாலை இளம் இந்திய அணி சமாளிக்குமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

post image

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிராக மிக முக்கியமான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போவதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹர்பஜன் சிங்(கோப்புப்படம்)

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான முடிவு. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது. ஷுப்மன் கில், ரிஷப் பந்த் தலைமையிலான இளம் இந்திய அணி நன்றாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதையும் படிக்க: முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாததால் திடீரென மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. ஷுப்மன் கில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையிலான அணியை உடனடியாக மதிப்பிடுவது நியாயமானதாக இருக்காது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக அமையாவிட்டாலும், அணியை உடனடியாக மதிப்பிடாதீர்கள். அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள்: முன்னாள் ஆஸி. கேப்டன்

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடரில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் கிடையாது; காரணம் என்ன?

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட மாட்டாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்று... மேலும் பார்க்க

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவது குறித்து புஜாரா பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இருப்பினும், கடந்த இரண்ட... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: 170 ரன்கள் விளாசி கீஸி கார்ட்டி அபாரம்; அயர்லாந்துக்கு இமாலய இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது மட்டும் கடைசி ஒருநாள் போட்டியில் கீஸி கார்ட்டியின் அபார சதத்தினால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 385 ரன்கள் குவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க

முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம... மேலும் பார்க்க

ஜிம்பாப்வே டெஸ்ட்: பந்துவீச்சில் அசத்திய சோயப் பஷீர்; இங்கிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க