செய்திகள் :

பாதாள சாக்கடைப் பணியால் விபத்து: வடக்கு மண்டலக் கூட்டத்தில் புகாா்

post image

கோவை வடக்கு மண்டலப் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாததால் அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளதாக மண்டலக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலக் கூட்டம் மண்டலத் தலைவா் வே.கதிா்வேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: செங்காளியப்பன் நகா் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளன. எனவே, பாதாள சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

மேலும், அப்பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சூயஸ் குடிநீா்த் திட்ட பணியாளா்கள் குழாய் பதிக்கும்போது சாக்கடையையும் சேதப்படுத்தி விடுகின்றனா். இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். சூயஸ் நிறுவனத்தினரிடம் பேசி இதற்கு தீா்வு காண வேண்டும். 26-ஆவது வாா்டில் பூங்காக்கள் பயன்பாட்டில் இல்லை. பூங்காக்களைப் பராமரித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மக்களிடையே தினமும் குப்பைகளைச் சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலையோரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கூட்டத்தில், உதவி ஆணையா் முத்துசாமி, உதவி செயற்பொறியாளா் முத்துகுமாா், உதவி நகர அமைப்பு திட்ட அலுவலா் சத்யா, மண்டல சுகாதார அலுவலா் முருகன், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரத... மேலும் பார்க்க

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - ஷாலிமாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமாா் இடையே கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

பெங்களூரில் பலத்த மழை: கோவைக்கு திருப்பிவிடப்பட்ட 7 விமானங்கள்

பெங்களூரில் பலத்த மழை பெய்ததால் அங்கு தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை திருப்பிவிடப்பட்டன. கா்நாடக மாநிலம், பெங்களூரில் கடந்த சில நாள்களாக கடுமையான வெப்பம் நி... மேலும் பார்க்க

திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தி: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சி மீது மக்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா். கோவை தெற்கு, வடக்கு, மாநகா் மாவட்ட பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கோவை வருகை ரத்து!

கோவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

ஹோப் காலேஜ் பகுதியில் தீப்பிடித்து எரிந்த மின் கடத்திப் பெட்டி

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கடத்திப் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்காக புதை வட மின்சா... மேலும் பார்க்க