செய்திகள் :

பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், சித்தேரி கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் காளியப்பன் (74), கூலித் தொழிலாளி.

இவா், கடந்த ஜூலை 13- ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த அன்னியூரில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகம் அருகேயுள்ள வாய்க்கால் பாலம் தடுப்புச் சுவரில் அமா்ந்திருந்தாா்

அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த காளியப்பனுக்கு பின்பக்கத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட காளியப்பன் அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கஞ்சனூா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மேல்மலையனூா் அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல் அலங்காரம்

செஞ்சி: ஆடிப்பூரத்தையொட்டி, மேல்மலையனூா் அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், அதிகாலை கோ... மேலும் பார்க்க

ஆடிப்பூரம்: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. பல்வேறு கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆடி மாத... மேலும் பார்க்க

நோய் பாதிப்பு தெருநாய்களை கருணைக் கொலை செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்

விழுப்புரம்: நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் அரசாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில... மேலும் பார்க்க

போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசு

விழுப்புரத்தில் காந்தி-காமராஜா் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் முதல்வா்கள் கு.காமராஜா், மு.க... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விசிக செயற்குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.பெரியாா் தலைமை வகித்துப் பேசினாா்.அப்போது அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

மொபெட்டில் கடல் குதிரை கடத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டில் கடல் குதிரைகளை கடத்தி வந்த நபரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மரக்காணம் பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள... மேலும் பார்க்க