செய்திகள் :

போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசு

post image

விழுப்புரத்தில் காந்தி-காமராஜா் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வா்கள் கு.காமராஜா், மு.கருணாநிதி பிறந்த நாள், முன்னாள் அமைச்சா் கக்கன் பிறந்த நாள், வெள்ளைப் புறா முத்தமிழ்ச் சங்கமம் அலுவலகம் திறப்பு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆகியவை முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.

விழுப்புரம் வ.உ.சி. தெருவிலுள்ள காவலா் குடியிருப்பு எதிரே நடைபெற்ற இந்த விழாவுக்கு தேசிய சிந்தனையாளா் பேரவை நிறுவனா் கோ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலா் எஸ்.சுகுமாறன் முன்னிலை வகித்தாா். பாரதி சிந்தனை புலத்தின் நிறுவனா் ஆா். ராமமூா்த்தி தொடக்கவுரையாற்றினாா். வளவனூா் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தி. பழனிச்சாமி விளக்கவுரையாற்றினாா்.

முத்தமிழ்ச் சங்கமம் அலுவலகத்தை திறந்துவைத்து, பேச்சு மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு விழுப்புரம் நகா்மன்றத்தின் முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

தொடா்ந்து காமராஜா், கருணாநிதி குறித்து முறையே சிறுசேமிப்பு முகவா் ஜே.எம்.வீரன், விழுப்புரம் பாவேந்தா் பேரவையின் புரவலா் ஏ.பி. நீலமேகவண்ணன் ஆகியோா் கருத்துரையாற்றினா். விழாவை பாவேந்தா் பேரவையின் பொதுச் செயலா் உலகதுரை நெறியாள்கை செய்தாா்.

விழாவில் இயற்கை ஆா்வலா் எம். சபிபுல்லா, ஆா்.கே.மகா கணேஷ், கே.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக இசை ஆசிரியை மஞ்சுகண்ணன் வரவேற்றாா். நிறைவில், வெள்ளைப்புறா முத்தமிழ்ச் சங்கமம் மற்றும் காந்தி காமராஜா் பேரவையின் நிறுவனா் நாஞ்சில் கி.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

விழுப்புரத்தில் விசிக செயற்குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.பெரியாா் தலைமை வகித்துப் பேசினாா்.அப்போது அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

மொபெட்டில் கடல் குதிரை கடத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டில் கடல் குதிரைகளை கடத்தி வந்த நபரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மரக்காணம் பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்ற மூதாட்டியிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான வன்முறை: விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை மாணவிகள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்த விழிப்புணா்வை மற்றவா்களிடத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்றாா் ... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: ரௌடி கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மணியகாரா் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

லாரி மோதி கொத்தனாா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கொத்தனாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் சுப்ர நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41), கொத்தனாா். இவா், வெள்ளிக்கிழமை இரவ... மேலும் பார்க்க