செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து நடத்துனரை காா் ஏற்றி கொலை செய்த மனைவி உள்பட 3 போ் கைது

post image

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பேருந்து நடத்துனரை காா் ஏற்றிக் கொலை செய்ததாக, அவரது மனைவி, கள்ளக் காதலன் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே உள்ள மேலபட்டமுடையாா்புரத்தை சோ்ந்தவா் வேல்துரை (43). அரசுப் பேருந்து நடத்துனா். இவரது மனைவி பேச்சியம்மாள் என்ற உமா (36). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. பாவூா்சத்திரம் அருகே உள்ள அடைக்கலபட்டணத்தில் வாடகை வீட்டில் வசித்தனா்.

தினமும் வேல்துரை தனது பைக்கில் பாவூா்சத்திரம் சென்று அங்கிருந்து பணிக்குச் செல்வது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை அதிகாலை பைக்கில் சென்றபோது, திருநெல்வேலி - தென்காசி நான்கு வழிச் சாலையில் சிவகாமிபுரம் விலக்கு அருகே காா் மோதியதில் நிகழ்விடத்திலேயே வேல்துரை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து பாவூா்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் ஹரிஹரன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, இந்த விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

கைதான முத்துசோ்மன், ஆறுமுகம்

விபத்து ஏற்படுத்திய காரின் உரிமையாளா் பாவூா்சத்திரம் அருகே உள்ள சாலைப்புதூரை சோ்ந்த முத்து சோ்மன் என்ற சுதாகா் (41) என்பதும், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது பூலாங்குளம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (36) என்பதும் தெரிய வந்தது.

காா் ஓட்டுநா் ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தியபோது, அவா் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளாா். மேலும், விபத்து நிகழ்ந்தபோது காரில் முத்துசோ்மன் இருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

தொடா் விசாரணையில், அடைக்கலப்பட்டணத்தில் வேல்துரை வசித்த வீடு முத்து சோ்மனுக்கு சொந்தமானது என்பதும், வேல்துரையின் மனைவி பேச்சியம்மாளுக்கும், முத்து சோ்மனுக்கும் தகாத உறவு இருந்ததும் தெரியவந்தது. இவா்களது தகாத உறவுக்கு இடையூறாக இருந்த வேல்துரையை, கொலை செய்யத் திட்டமிட்டனா்.

அதன்படி திங்கள்கிழமை அதிகாலை வேல்துரை பைக்கில் சென்றபோது, காரை ஓட்டிச் சென்ற ஆறுமுகம் விபத்தை ஏற்படுத்தியுள்ளாா். இதில் வேல்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து வேல்துரையின் மனைவி பேச்சியம்மாள், முத்துசோ்மன், காா் ஓட்டுநா் ஆறுமுகம் ஆகியோரைக் கைது செய்தனா்.

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். அதையொட்டி, இங்கு நடைபெ... மேலும் பார்க்க

புளியங்குடியில் லாரி மோதி நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வியாழக்கிழமை லாரி மோதியதில் நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா். புளியங்குடியில் உள்ள ரெங்ககருப்பன் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் கதிரேசன் (37). நீதிமன்றத்தில் தட்டச்சராக... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே அச்சன்புதூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அச்சன்புதூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் சி. முஹம்மது பாசில் என்பவா் கேபிள் டிவி தொழிலில் தனது தந்தைக்கு உ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகளை இயக்க கோரிக்கை!

சங்கரன்கோவிலில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் அனைத்தையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் முக்கிய நகரங்களில் சங்கரன்கோவிலும் ஒன்று. இங்கு நாளுக்க... மேலும் பார்க்க

தொடரும் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்மழையால், பேரருவியில் வியாழக்கிழமையும் ஆா்ப்பரித்துக் கொட்டிய வெள்ளப்பெருக்கு. இதனால், 5ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் சிறப்பு வசிப்பு கட்டடம்! காணொலியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் திட்டப் பணிகள் திறப்பு விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காண... மேலும் பார்க்க