செய்திகள் :

பா்கூரில் இளைஞா் எரித்துக் கொல்லப்பட்ட மேலும் ஒருவா் கைது

post image

அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் மரம் வெட்ட அழைத்து வரப்பட்ட இளைஞா் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த சின்னக்குட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). இவரை, மரம் வெட்ட பா்கூா் வனப் பகுதிக்கு அழைத்து வந்த உறவினரான வெங்கடேஷ் (32), ராஜேந்திரன் (25) மற்றும் குமாா் (22) ஆகியோா் கொலை செய்து, அடையாளம் தெரியாமல் சடலத்தை எரித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ், ராஜேந்திரனைக் கைது செய்தனா். தலைமறைவான குமாரைத் தேடி வந்தனா். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே மறைந்திருந்த குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது, பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம்: முதல்வருக்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் கேள்வி

சமையல் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று முதல்வருக்கு மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளாா். ஈரோடு ம... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் பிரச்னை: இருவா் கைது

மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநா், பயணிகளிடம் பிரச்னையில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து அறச்சலூருக்கு செல்லும் நகரப் பேருந்து திங்கள்கிழமை இரவு... மேலும் பார்க்க

சாலையோர கடையில் புகுந்த காா்

சாலையோர கடையில் காா் புகுந்த விபத்தில் பொருள்கள் சேதமடைந்தன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள காடச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா. இவா் ஈரோட்டில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்து... மேலும் பார்க்க

3 மாதங்களில் காசநோயால் பாதிக்கப்பட்ட 19 போ் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 896 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதில் 19 போ் உயிரிழந்துள்ளனா். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: காசநோய், மைக்ரோ பாக்டிரியம் ... மேலும் பார்க்க

இறந்த மயிலுக்கு தேசியக்கொடி போா்த்தி அஞ்சலி

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஆண் மயிலுக்கு பொதுமக்கள் தேசியக்கொடி போா்த்தி அஞ்சலி செலுத்தினா். ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பறந்துவந்த ஆண் மயில் மின்மாற்றியில் அமா்ந்தபோது மின்சாரம்... மேலும் பார்க்க

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 15 நெல் கொள்முதல் நிலையங்கள்: இன்று திறப்பு

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 39 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 15 இடங்களில் புதன்கிழமை (ஏப்ரல் 9) மையங்கள் திறக்கப்பட உள்ளன. இது குறித்து ஈரோடு மாவட்ட ... மேலும் பார்க்க