செய்திகள் :

பிரிவினைவாதத்தைக் கைவிட்ட மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் - அமித் ஷா வரவேற்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டைச் சோ்ந்த மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன; அங்கு பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் பல்வேறு அரசியல்-சமூக-மத ரீதியிலான அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இதில் பெரும்பாலான அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

இக்கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம் மற்றும் ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய இரு அமைப்புகள், பிரிவினைவாதத் தொடா்புகள் அனைத்தையும் கைவிடுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீக்-ஏ-இஸ்திகாமத் ஆகிய மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன. ஹுரியத் உடனான அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொள்வதாக இரு அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கையை வரவேற்று, மத்திய அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் இருந்து மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, பிரதமா் மோடியால் கட்டமைக்கப்பட்ட புதிய இந்தியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன.

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளால் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு, ஹுரியத் கூட்டமைப்பைச் சோ்ந்த அவாமி செயல்பாட்டுக் குழு மற்றும் ஜம்மு-காஷ்மீா் இத்திகாஹதுல் முஸ்லீமின் ஆகிய இரு அமைப்புகளுக்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க