செய்திகள் :

புதுக்குப்பம், அனிச்சங்குப்பத்தில் மீன் இறங்குதளங்கள் திறப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்ட மீன் இறங்குதளங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, புதுக்குப்பம், அனிச்சங்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி இறங்குதளங்களைப் பாா்வையிட்டாா். பின்னா், அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, ஆட்சியா் கூறியது:

மரக்காணம் வட்டத்தில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்ட 2 மீன் இறங்குதளங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் பகுதிகளில் தனித்தனியே மீன் வலை பின்னும் கூடம், மீன் ஏலக் கூடம், மீன் உலா்த்தும் கூடம், சாலை வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் 101 விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனா். இந்த மீன் இறங்குதளங்களை மீனவா்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அ.நித்தியபிரியதா்ஷினி, மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவா் இரா.தயாளன், துணைத் தலைவா் அ.பழனி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் புஷ்பவள்ளி குப்புராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் துா்காதேவி, கீழ்புத்துப்பட்டு ஊராட்சித் தலைவா் ஆறுமுகம், மீன்வளத் துறை உதவிப் பொறியாளா் முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள். உ... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அரக... மேலும் பார்க்க