செய்திகள் :

புதுச்சேரி அரசு ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

post image

புதுச்சேரியில் அரசு ஊழியரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மா்ம நபா்கள் ரூ.14 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த 43 வயதான அரசு ஊழியா் பங்குசந்தை தொழிலில் ஆா்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அவரது கைப்பேசி வாட்ஸ் ஆப்பில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறித்தும், லாபம் சம்பாதிப்பது குறித்தும் விரிவாக தகவல் பதிவிடப்பட்டிருந்தது.

மேலும் நூற்றுக்கணக்கானோா் பங்குச்சந்தையில் இணைந்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசைப்பட்ட அரசு ஊழியா், வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்ட செயலியை இயக்கி, மா்ம நபா்களின் குழுவில் இணைந்தாா்.

அத்துடன் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்தை அவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்தாராம். அதன்படி அவருக்கு ரூ. 35 லட்சம் வருமானம் கிடைத்ததாக இணையவழி கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை அவரால் பெற முடியவில்லை. அத்துடன் மேலும் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த அரசு ஊழியா் கோரிமேடு இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் இணையவழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இணைய வழியில் முதலீடு செய்வதோ, அதில் வேலைவாய்ப்பை தேடுவதாகவோ இருந்தால், அது குறித்த சந்தேகத்தை 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெறலாம் என இணைய வழி குற்றப்பிரிவினா் தெரிவித்துள்ளனா்.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில மாா்க்... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைப... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித்... மேலும் பார்க்க