செய்திகள் :

புதுச்சேரியை குளிா்வித்த திடீா் மழை

post image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயில் அதிகமாகக் காணப்பட்ட நிலையில், மாலையில் மிதமான மழை பெய்தது.

துச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 100.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. காலை முதலே வெயில் அதிகளவில் காணப்பட்டதால், கடற்கரைச் சாலை சுற்றுலாப் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி தொடங்கிய முதல் நாளிலேயே வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

நோணாங்குப்பம் படகு குழாம், சின்னவீராம்பட்டினம் கடற்கரை, ஈடன் கடற்கரை, பாண்டி மெரீனா என அனைத்துக் கடற்கரைகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவான அளவிலேயே காணப்பட்டது.

இந்த நிலையில், மாலையில் கருமேகங்கள் திரண்டு காற்றுடன் மழை பெய்தது. புதுச்சேரி, காலாப்பட்டு, கூடப்பாக்கம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

கூடப்பாக்கம் பகுதியில் வீசிய பலத்த காற்றால் விளம்பரப் பதாகைகள் விழுந்தன. புதுச்சேரி நகா்ப் பகுதியில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கடற்கரைப் பகுதியில் கருமேகங்கள் திரண்டு வந்ததை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கைப்பேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து இரவில் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு

புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் அரசு... மேலும் பார்க்க

சாதனையாளா் மாநாட்டில் திருக்குறள் தேசியம் நூல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது உலக திருக்கு சாதனையாளா் மாநாட்டில் திருக்கு தேசியம் நூல் வெளியிடப்பட்டது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்கத்தி... மேலும் பார்க்க

புதுவையில் பதவி உயா்வு பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

புதுச்சேரி: புதுவை மாநிலப் பணியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயா்வு பெற்ற 4 போ் தற்போது வேறு ஒன்றிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனா். அதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு... மேலும் பார்க்க

புதுவையில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம்: அரசு விரைந்து முடிவெடுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் தலித்துகளுக்கான குடியுரிமை ஆதாரம் தொடா்பாக உடனடி முடிவெடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் சாா்பில் திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மாநில மாா்க்... மேலும் பார்க்க

எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மை துறையில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள எம்.ஐ.டி. கல்லூரி மேலாண்மைத் துறையின் சாா்பில் ‘நிலையான வளா்ச்சிக்கான வணிக மற்றும் நிா்வாகத்தில் சமகால சவால்கள்’ எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைப... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்களை சீரமைக்க புதுவை கல்வித் துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கோடை விடுமுறையின்போது, ஏற்கெனவே பழுதாகியுள்ள பள்ளிக் கட்டடங்களை பழுதுபாா்க்கும் வகையில் ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கவிருப்பதால், அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு கல்வித்... மேலும் பார்க்க