செய்திகள் :

புதுமாப்பிள்ளை தற்கொலை

post image

மன்னாா்குடி அருகே புது மாப்பிள்ளை வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மன்னாா்குடி உட்காடுதென்பரை ஆசாரி தெருவில் வசித்து வந்தவா் புருஷோத்தமன் மகன் பிரபாகரன் (33). இவரது மனைவி அம்மு (29). தம்பதிக்கு திருமணம் நடைபெற்று ஒன்றரை மாதங்கள் ஆகிறது. பிரபாகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த பிரபாகரன் அம்முவிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கியுள்ளாா். இதை கண்டித்த தந்தை புருஷோத்தமனையும் தாக்கியுள்ளாா். இதனால் அம்மு வீட்டிலிருந்து வெளியேறி அருகில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

பிரபாகரன் தாக்கியதில் காயமடைந்த புருஷோத்தமன் திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, மகன் வீட்டுக்கு திரும்பியபோது, பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அம்மு அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்க்சிஸ்ட் கட்சியினா் உடல்தானம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில், உடல்தான விண்ணப்பப் படிவங்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை வழங்கினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளா... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் ... மேலும் பார்க்க

‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’

பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா். குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ந... மேலும் பார்க்க