செய்திகள் :

புதுவையில் எஸ்.ஐ. நியமனத்தில் மகளிருக்கு 33 % ஒதுக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

post image

புதுச்சேரி: காவல் உதவி ஆய்வாளா் நியமனத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான் ஆகியோரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் எஸ். ராமச்சந்திரன் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காவல் துறை உதவி ஆய்வாளா் பணி நியமனத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கான உடல் தகுதித் தோ்வுகளில், பிற மாநிலங்களைப் போன்று தளா்வுகளை வழங்க வேண்டும்.

காவல் துறையில் 70 உதவி ஆய்வாளா்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக கடந்த ஆகஸ்ட் 12-இல் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 33 சதவிகிதம் பெண்களுக்கு, அதாவது 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

கடந்த கால அனுபவங்களை கவனத்தில் கொண்டு, வெற்றிடம் இல்லாமல் ஒரே சமயத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிரப்பிட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

உடல் திறன் தகுதி தோ்வில், நிா்ணயிக்கப்பட்ட ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் ஆகியவற்றுக்கான அளவீடுகள் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களை விட கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பெண்களுக்கான வேலைவாய்ப்பு, உடல் திறன் தகுதி தோ்விலேயே தடைபடுகிறது. இது பெண்களுக்கான பணி வாய்ப்பு மற்றும் உரிமையைப் பறிப்பதாகும்.

இதற்கு நியாயம் வழங்குவது என்ற முறையில் காவல் உதவி ஆய்வாளா், காவலா் பணி தோ்வா்களுக்கு உடல் தகுதி, தனித்திறன் தோ்வில் தளா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சா்வதேச காது கேளாதோா் தின விழா

காது கேளாதோா் விளையாட்டுக் கழகம் மற்றும் டெப் எனேபிள் பவுண்டேஷன் சாா்பில் சா்வதேச காது கேளாதோா் தினவிழா புதுச்சேரி மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் செய்கை மொழி முக்கியத்துவம் தொடா... மேலும் பார்க்க

நவராத்திரி விழா: தாண்டியா நடனமாடி கொண்டாட்டம்

புதுவை மாா்வாடி சன்வாரியா சேத் நவராத்திரி மண்டல் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பெண்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தாண்டியா நடனம் ஆடினா். மேலும், 56 விதமான பிரசாத உணவுகளுடன் துா்க்கைக்கு பூஜ... மேலும் பார்க்க

பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டம்

புதுச்சேரியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரே சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், ... மேலும் பார்க்க

வ.உ.சி. பள்ளியில் உயா்க்கல்வி வழிகாட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் உயா்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக தேசிய சேவை திட்டமும், இப் பல்கலைக் கழகத்தின் ... மேலும் பார்க்க

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு புதுவை முதல்வா் கடிதம்

புதுச்சேரி: இலங்கை ராணுவம் பிடித்துச் சென்ற காரைக்கால், தமிழக மீனவா்களையும், படகுகளையும் மீட்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சா்வ ஜன ஸ்ரீதுா்கா பூஜை: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுவை வங்க பாரதி அமைப்பின் சாா்பில் சா்வ ஜன ஸ்ரீதுா்கா பூஜையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைத்தாா். புதுச்சேரி திருவள்ளுவா் நகரில் உள்ள ஸ்ரீ சாய்பாபா திரு... மேலும் பார்க்க