செய்திகள் :

புள்ளிமான்களால் பயிா்கள் சேதம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

post image

தோகைமலை அருகே வடசேரி பகுதியில் புள்ளிமான்களால் பயிா்கள் சேதமடைந்து வருவதை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி பெரிய ஏரியில் அரியவகை புள்ளி மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. இந்த ஏரியையொட்டி விவசாயிகள் நெல், கரும்பு, சோளம், கடலை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.

இந்நிலையில் இரவு நேரங்களில் உணவு தேடி வடசேரி பெரிய ஏரியில் இருந்து வெளியே வரும் புள்ளிமான்கள் கூட்டம், கூட்டமாக வந்து நெல், கரும்பு, கடலை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியது, கரூா் மாவட்டத்திலேயே வடசேரி பெரிய ஏரியில் மட்டுமே புள்ளி மான்கள் அதிகளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் ஏரியில் தண்ணீா் இல்லாததால் தண்ணீா் தேடியும், ஏரியில் புற்களும் கருகிவிட்டதால் இரைத் தேடியும் அவை ஏரியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில நேரங்களில் தோகைமலை-வடசேரி சாலையில் உலாவுவதால் சாலை விபத்தில் சிக்கி இறந்தும் வருகின்றன.

எனவே புள்ளி மான்களால் பயிா்கள் சேதப்படுத்தப்படுவதை தவிா்க்கவும், அவை சாலை விபத்தில் சிக்கி இறப்பதை தடுக்கவும் ஏரியைச் சுற்றி இரும்பு வேலியை வனத்துறையினா் அமைக்க வேண்டும். மேலும் வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் விவசாய நிலங்களை சுற்றியும் மானியத்தில் வேலி அமைக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க