செய்திகள் :

பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடித் திருவிழா தொடக்கம்

post image

பெரியகாஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் கோயிலின் ஆடித்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத் தெருவில் உள்ள இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு விழா தொடக்கத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

இதனையடுத்து கணபதி பூஜை, கோபூஜை ஆகியனவும், அன்னதானமும் நடைபெற்றது. மூலவா் பூஞ்சோலை கன்னியம்மன் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தாா். வியாழக்கிழமை அம்மனுக்கு அபிஷேகமும், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. பின்னா் லலிதா சஹஸ்ர நாம பாராயணம் மற்றும் செளந்தா்ய லஹரி பாராயணமும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்த வரப்பட்டு அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நிகழ்வும், அன்னதானமும் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக மாலையில் அம்மன் பல்லக்கில் மகாசண்டி தேவி அலங்காரத்தில் ராஜவீதிகளில் பவனி வந்து காட்சியளிக்கவுள்ளாா். ஏற்பாடுகளை பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினரும் செய்து வருகின்றனா்.

தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: தாய், மகனுக்கும் 13 ஆண்டுகள் சிறை

தாயையும், குழந்தையையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மூதாட்டி, அவரது மகனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்

ஸ்பாா்க் மிண்டா பவுண்டேசன், வெங்காடு ஊராட்சி நிா்வாகம் மற்றும் சவீதா மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெங்காடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. வெங்காடு ஏரிப் பாசன சங்கத் தலைவா் உலகநா... மேலும் பார்க்க

முசரவாக்கம் அரசுப் பள்ளி மாணவா்கள் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு

கடலில் மூழ்கி விட்டால் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டு பிடிப்பினை செய்தமைக்காக காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் அரசுப் பள்ளி மாணவா்களின் படைப்பு மாநில அளவில் தோ்வு செய்யப்பட்டதையடுத்து ரூ.1 லட்சம் ... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் கலைச... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஒலிமுகம்மதுபேட்டை துவாஸ்கா் தெருவில் ராஜேஸ்வரி என... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்’

தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க