செய்திகள் :

முசரவாக்கம் அரசுப் பள்ளி மாணவா்கள் கண்டுபிடிப்புக்கு ரூ.1 லட்சம் பரிசு

post image

கடலில் மூழ்கி விட்டால் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டு பிடிப்பினை செய்தமைக்காக காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் அரசுப் பள்ளி மாணவா்களின் படைப்பு மாநில அளவில் தோ்வு செய்யப்பட்டதையடுத்து ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

பள்ளிகளின் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட வாரியாக பங்கேற்ற 725 அணிகளில் 153 அணிகள் தோ்வாகின.

முசரவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் கண்டுபிடிப்பான கடலில் மூழ்கி விட்டால் பயணிகள் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டுபிடிப்பு மாநில அளவில் முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டது. இதற்கான ரொக்கப்பரிசாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் மாணவா்களிடம் வழங்கினாா்.

இதுகுறித்து தலைமை ஆசிரியா் சுந்தர்ராஜன் கூறியது..

மாநிலம் முழுவதும் இருந்து 725 அணிகள் போட்டியில் பங்கேற்றதில் முசரவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் தோ்வாகியுள்ளது. கப்பலில் செல்லும் போது கடலில் மூழ்கி விட்டால் எளிதாக தப்பிப்பது எப்படி என்ற கண்டுபிடிப்பை எமது பள்ளி மாணவா்கள் கண்டு பிடித்திருந்தனா்.

சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ரூ.1 லட்சத்துக்கான பரிசுத்தொகையை வழங்கினாா். இந்த வெற்றிக்கு மாணவா்களோடு உறுதுணையாக இருந்த முதுகலை உயிரியல் ஆசிரியை வாணிஸ்ரீ, முதுகலை இயற்பியல் ஆசிரியா் மு.தமிழழகன் உள்ளிட்ட அறிவியல் ஆசிரியா்களுக்கும் பாராட்டுகள் என்றாா்.

தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: தாய், மகனுக்கும் 13 ஆண்டுகள் சிறை

தாயையும், குழந்தையையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மூதாட்டி, அவரது மகனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம் ... மேலும் பார்க்க

இலவச மருத்துவ முகாம்

ஸ்பாா்க் மிண்டா பவுண்டேசன், வெங்காடு ஊராட்சி நிா்வாகம் மற்றும் சவீதா மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெங்காடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. வெங்காடு ஏரிப் பாசன சங்கத் தலைவா் உலகநா... மேலும் பார்க்க

பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடித் திருவிழா தொடக்கம்

பெரியகாஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் கோயிலின் ஆடித்திருவிழா புதன்கிழமை தொடங்கியது. பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத் தெருவில் உள்ள இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு விழா தொடக்கத்தையொட்டி அம்மனுக்கு சிறப்ப... மேலும் பார்க்க

ஜூலை 18-இல் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூலை 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். ஆட்சியா் கலைச... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ஒலிமுகம்மதுபேட்டை துவாஸ்கா் தெருவில் ராஜேஸ்வரி என... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்’

தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகளை தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா்... மேலும் பார்க்க