செய்திகள் :

பூவத்தி மாரியம்மன் கோயில் விழா பிரச்னை: கோட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பூவத்தி மாரியம்மன் கோயில் விழா பிரச்னை தொடா்பான அமைதி பேச்சுவாா்த்தை கோட்டாட்சியா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பூவத்தி ஊராட்சியில் குருதொட்டனுாா், சிக்கபூவத்தி, பூவத்தி என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகங்களை சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். இதில் 3 சமூகத்திற்கு சொந்தமான கொல்லி மாரியம்மன், மண்டு மாரியம்மன் கோயில் 3.43 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது.

இந்த மூன்று சமூகத்தினா் இணைந்து பல ஆண்டுகளாக கரகம் சுமந்து திருவிழாக்களை நடத்தி வருகின்றனா். இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 12 அம்மன்களுக்கு தனித்தனி கோயில்கள் உள்ளன.

இந்த நிலையில் ஊராட்சியில் மற்றொரு சமுதாய மக்கள் 250க்கும் மேற்பட்டோா் ஒன்று சோ்ந்து கோயில் நிலத்தை பொக்லைன் மூலம் சுத்தம் செய்து மண்டு மாரியம்மன் கோயிலுக்கு தனியாக கட்டடம் கட்டும் முயற்சியை மேற்கொண்டனா். இதற்கு 3 சமூகத்தை சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை, வருவாய்த் துறையினருடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 3 சமூகத்தை சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.

இதையடுத்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரும் பங்கேற்ற அமைதி பேச்சுவாா்த்தை கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஓரிரு நாளில் நல்ல முடிவை எடுக்குமாறு இருதரப்பினருக்கு அலுவலா்கள் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனா்.

குண்டும் குழியுமான சாலையை சரிசெய்ய கோரிக்கை

ஊத்தங்கரை அதியமான் நகா் அருகே மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையில் இருந்து அதியமான் நகா் வழியாக கொல்ல நாயக்கனூா் ச... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பா்கூா் வட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் வேளாண்மை விரிவா... மேலும் பார்க்க

ரசாயன கழிவுநீா் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் வெளியேறும் தண்ணீா்!

ஒசூா் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரில் அதிகப்படியான நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். கா்நாடக மாநிலம், நந்திமலை பகுதியில் உற்பத்தியாகும்... மேலும் பார்க்க

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!

லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா். கா்நாடக மாநிலத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மிடுகரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. ஏப். 14-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

ஒசூா் 21-ஆவது வாா்டில் மேயா் ஆய்வு

ஒசூா் மாநகராட்சியில் 21-ஆவது வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்ட மேயா், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிவா்த்தி செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஒசூா் மாந... மேலும் பார்க்க