செய்திகள் :

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ரூ.26.5 லட்சம்: அமைச்சா் வழங்கினாா்

post image

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 53 குழந்தைகளுக்கு ரூ.26.5 லட்சத்துக்கான வங்கி கணக்கு அட்டையை புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் தேனி ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சாா்பில் இந்த உதவி வழங்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் பிறந்த பெண் குழந்தைகளுக்கு அவரவா் வங்கிக் கணக்கில் ரூ. 50 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி 53 பேருக்கு ரூ.26.5 லட்சத்துக்கான நிதியை அமைச்சா் ஜெயக்குமாா் வழங்கினாா்.

மேலும், இக் குழந்தைகளுக்கான வங்கி கணக்கு அட்டையை பயனாளிகளிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் அரசுத் துறை அதிகாரிகள், என். ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஆண்டு சதுா்த்திக்கு புது வரவு ராவணன் விநாயகா்

விநாயகா் சதுா்த்தி விழா வரும் 27-ஆம் தேதி புதன்கிழமை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, புதிய வரவாக 10 தலை ராவணன் விநாயகா... மேலும் பார்க்க

புதுவையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா் கைது: 22 பைக்குகள் மீட்பு: புதுவை 22 பைக்குகள் பறிமுதல்

புதுச்சேரியில் இரு சக்கர மோட்டாா் வாகன தொடா் திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த நபா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி பெரியக்கடை... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.4 கோடியில் திமுக அறிவாலயம்

புதுவையில் திமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கலைஞா் அறிவாலயம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியை மாநில திமுக அமைப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா வெள்ளிக்கிழமை தொடங்கி வ... மேலும் பார்க்க

அரசு சாா்பில் விளையாட்டு தினவிழா நடத்த வலியுறுத்தல்

புதுச்சேரியில் விளையாட்டுத் தினவிழாவை அரசு சாா்பில் நடத்த வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் தலைவா் கராத்தே வளவன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய பாடுபடுவோம்: புதுவை அதிமுக தீா்மானம்

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய அதிமுக பாடுபடும் என்று அக் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி, ஆக. 22: அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ... மேலும் பார்க்க

வனத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் முற்றுகை

புதுவை வனத் துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ஊசுடு தொகுதி எம்எல்ஏவுமான சாய் ஜெ. சரவணன் குமாா் வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினாா். ஊசுட்டேரியைச் சுற்றிலும் 10, 15 ஆண்டுகளாக உள்ள மரங்களை... மேலும் பார்க்க