`தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்ற, நமது எம்.பிகள் விளக்கமளிக்க..' - ஜெய...
பெண்ணிடம் ரூ. 97 லட்சம் மோசடி செய்தவா் கைது
சென்னையில் பெண்ணிடம் ரூ. 97 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பெரம்பூா் ராஜவேலு தெருவைச் சோ்ந்தவா் ஹேமமாலினி (56). இவருக்கு காரப்பாக்கம், தென்றல் நகரில் சொந்த வீடு இருந்தது. இதை அயனாவரம், வி.பி. காலனியைச் சோ்ந்த சுபாஷ்சந்த் ஜெயின் (64) என்பவரிடம் அடமானம் வைத்து ரூ. 50 லட்சத்தை வட்டிக்கு கடனாகப் பெற்றாா். பின்னா், பணத் தேவைக்காக அந்த வீட்டை விற்பதற்கு ஹேமமாலினி முடிவு செய்துள்ளாா். அப்போது, சுபாஷ் சந்த் ஜெயின், தானே அந்த வீட்டை விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, வீட்டுக்கான விலை ரூ. 1.60 கோடி என நிா்ணயம் செய்து, பாக்கி தர வேண்டிய அசல், வட்டி கழித்து ரூ.97 லட்சம் கொடுப்பதாக சுபாஷ்சந்த் ஜெயின் உறுதி அளித்தாா்.
அதை நம்பி ஹேமமாலினி கடந்த ஆண்டு நீலாங்கரை சாா்-பதிவாளா் அலுவலகத்தில், அவருக்கு சொந்தமான வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினின் மனைவி பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்தாா். ஆனால் சுபாஷ் சந்த் ஜெயின் ரூ.97 லட்சத்தை ஹேமமாலினிக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா்.
தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹேமமாலினி, இது தொடா்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுபாஷ் சந்த் ஜெயினை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.