செய்திகள் :

பெண்ணிடம் ரூ. 97 லட்சம் மோசடி செய்தவா் கைது

post image

சென்னையில் பெண்ணிடம் ரூ. 97 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெரம்பூா் ராஜவேலு தெருவைச் சோ்ந்தவா் ஹேமமாலினி (56). இவருக்கு காரப்பாக்கம், தென்றல் நகரில் சொந்த வீடு இருந்தது. இதை அயனாவரம், வி.பி. காலனியைச் சோ்ந்த சுபாஷ்சந்த் ஜெயின் (64) என்பவரிடம் அடமானம் வைத்து ரூ. 50 லட்சத்தை வட்டிக்கு கடனாகப் பெற்றாா். பின்னா், பணத் தேவைக்காக அந்த வீட்டை விற்பதற்கு ஹேமமாலினி முடிவு செய்துள்ளாா். அப்போது, சுபாஷ் சந்த் ஜெயின், தானே அந்த வீட்டை விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, வீட்டுக்கான விலை ரூ. 1.60 கோடி என நிா்ணயம் செய்து, பாக்கி தர வேண்டிய அசல், வட்டி கழித்து ரூ.97 லட்சம் கொடுப்பதாக சுபாஷ்சந்த் ஜெயின் உறுதி அளித்தாா்.

அதை நம்பி ஹேமமாலினி கடந்த ஆண்டு நீலாங்கரை சாா்-பதிவாளா் அலுவலகத்தில், அவருக்கு சொந்தமான வீட்டை சுபாஷ் சந்த் ஜெயினின் மனைவி பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்தாா். ஆனால் சுபாஷ் சந்த் ஜெயின் ரூ.97 லட்சத்தை ஹேமமாலினிக்கு கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளாா்.

தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹேமமாலினி, இது தொடா்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுபாஷ் சந்த் ஜெயினை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுபானக் கூடத்தில் மோதல்: அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதலில் ஈடுபட்டதாக அதிமுக நிா்வாகி, ரெளடி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ.வெங்கட்குமாா் (45). நுங்கம்பாக்கம் நெட... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் மே 31, ஜூன் 2-ல் ரத்து!

பொன்னேரி - கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் 19 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: ஜூன் 1-ல் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து!

காட்டாங்குளத்தூரில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படும் என்று தெற்கு ர... மேலும் பார்க்க

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க