செய்திகள் :

பெருந்துறை அருகே திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

post image

பெருந்துறை, பவானி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் திருவாச்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கே.இ.பிரகாஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் சீனிவாசன், மாநில நெசவாளா் அணி செயலாளா் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினா்களாக மாநில செய்தி தொடா்பு துணைச் செயலாளா் சூா்யா கிருஷ்ணமூா்த்தி, சமூக வலைதள பயிற்சியாளா் இளமாறன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், 2026 சட்டப் பேரவை தோ்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்கள் திருவாசகம், திருவேங்கடம், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சன் சுரேஷ், வழக்குரைஞா் பாலு, ராகவேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவ... மேலும் பார்க்க

அச்சு முறிந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

பவானி அருகே சோள மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் அச்சு முறிந்ததால், சாலையில் இருமுறை உருண்டது. பெருந்துறையில் இருந்து சோள மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பவானி - அந்தியூா் சாலையில் சரக்கு வாகனம் ஞாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விலைவாசி உயா்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றஞ்... மேலும் பார்க்க

‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்... மேலும் பார்க்க

சாலை விபத்து: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையம் பகுதி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: விவசாயி கைது

கோபி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க