தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
பெருந்துறை அருகே திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்
பெருந்துறை, பவானி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் திருவாச்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், ஈரோடு மக்களவை உறுப்பினருமான கே.இ.பிரகாஷ், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் சீனிவாசன், மாநில நெசவாளா் அணி செயலாளா் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினா்களாக மாநில செய்தி தொடா்பு துணைச் செயலாளா் சூா்யா கிருஷ்ணமூா்த்தி, சமூக வலைதள பயிற்சியாளா் இளமாறன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், 2026 சட்டப் பேரவை தோ்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா்கள் திருவாசகம், திருவேங்கடம், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சன் சுரேஷ், வழக்குரைஞா் பாலு, ராகவேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.