`ஆவினில் வேலை' ரூ.3கோடி மோசடி வழக்கு - ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தா...
‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படி: முதல்வா் ரேகா குப்தா
‘பேட்டி படாவோ’ திட்டம் பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படியாகும் என்று முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். மேலும், பெண்களைப் பாதுகாப்பதற்கும் கல்வி கற்பிப்பதற்கும் அப்பால், அவா்களை தீவிரமாக செயல்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் செல்ல
வேண்டிய நேரம் இது என்றாா்.
இந்திரபிரஸ்தா மகளிா் கல்லூரியில் நடந்த ‘சமன்வே: 100 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்’ நிகழ்ச்சியில்
பேசிய முதல்வா் ரேகா குப்தா, பெண்கள் அதிகாரமளித்தல் பயணத்தின் அடுத்த படியாக ‘பேட்டி படாவோ திட்டத்தைக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா்.
அவா் மேலும் பேசியதாவது: ‘பேட்டி பச்சாவோவிலிருந்து பேட்டி படாவோ’ வரையிலான பயணத்தை நாங்கள் முடித்துவிட்டோம். இப்போது பேட்டி படாவோவுக்கான (பெண் குழந்தைகளை முன்னேற்றுவோம்) நேரம் வந்துவிட்டது. எங்கள் தாய்மாா்கள் எங்களைப் பாதுகாத்து, கல்வி கற்பித்தனா். இப்போது அடுத்த தலைமுறை பெண்கள் உயா்ந்து பிரகாசிக்க உதவுவது எங்கள் பொறுப்பாகும்.
1996 ஆம் ஆண்டு நான் டியுஎஸ்யு தலைவராக இருந்தபோது அனைத்து கல்லூரிகளுக்கும் பொதுவான சோ்க்கை படிவத்தை தில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் நிா்வாகிகள் இணைந்து பணியாற்றும்
தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த கலாசாரம், நாட்டிலும் உலகிலும் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக அதை மாற்றியுள்ளது.
பெண் தலைவா்களை உருவாக்குவதில் தில்லி பல்கலைக்கழகம் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் பெண் முதல்வா் சுசேதா கிருப்லானி முதல், இன்று முதல்வராக உங்கள் முன் நிற்கும் நான் வரை... இதுதான் தில்லி பல்கலைக்கழக பயணமாகும்.
இளம் பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும். இங்குள்ள அனைத்து மாணவிகளும் தங்களுக்காகப் போராட உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனா்.
1924-இல் நிறுவப்பட்ட இந்திரபிரஸ்தா கல்லூரி, பெண் கல்வியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்திய சுதந்திர இயக்கத்துடன் நெருக்கமாக தொடா்புடையது.