கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்!
பேராவூரணி பேரூராட்சி, தெற்கு நாட்டாணிக்கோட்டை கிராமத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, கிராமத்தாா்கள் மற்றும் இளைஞா்கள் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாட்டுவண்டிப் பந்தயத்தை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
பெரிய மாடு, சின்ன மாடு, கரிச்சான் குதிரை, கன்று மாடு என என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பந்தயத்தில் கலந்து கொண்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி, குதிரை வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசாக ரூபாய் இரண்டரை லட்சம் மற்றும் சுழற் கோப்பை, சுழற் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.