செய்திகள் :

பேரூராட்சி ஊழியா் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை சிவகங்கையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பேரூராட்சி ஊழியா் சங்க மாநிலத் தலைவா் கோ.தங்கவேல் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச்

செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலா் தனுஷ்கோடி பொய்ப் புகாரில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்க முன்னாள் பொதுச்செயலா் எஸ்.கனகராஜ் கண்டனஉரையாற்றினாா். மாநில துணைப் பொதுச் செயலா் கா.காலசாமி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பாண்டி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் லதா, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் இளையராஜா , பேரூராட்சி ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் கு.முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் பேசினா். மாநில பொதுச் செயலா் டி .மகாலிங்கம் நிறைவுரையாற்றினாா். மாநிலப் பொருளாளா் த. பால்முருகன் நன்றி கூறினாா்.

அஜித்குமாா் கொலை வழக்கு: ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக அவரது தங்கை, ஆட்டோ ஓட்டுநா் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கா... மேலும் பார்க்க

தாத்தா, பேத்திக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தை உறவினா்கள் முற்றுகை!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தாத்தா, பேத்தியை அரிவாளால் வெட்டியவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் சமத்து... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 412 பேருக்கு பணி நியமன ஆணை

சிவகங்கையில் நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம் மூலம் நோ்காணலில் தோ்ச்சி பெற்ற 412 பேருக்கு பணி நியமன ஆணைகளைக் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா். சிவகங்கை ... மேலும் பார்க்க

வயிரவ சுவாமி கோயில் பிரம்மோத்ஸவ விழா: யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நகர வயிரவன்பட்டி வைரவ சுவாமி கோயில் பிரமோத்ஸவ விழாவையொட்டி, சனிக்கிழமை சுவாமி யானை வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தாா்களின் 9 நகரக்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டுவண்டிப் பந்தயம்!

சிவகங்கை அருகே கோயில் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பாத்தி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, அண்ணாமலை நகா் பொதுமக்கள் சாா்பில், மாட்டுவண்டிப் பந்தயம் சிறிய மாடு... மேலும் பார்க்க

காங். மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் நியமனம்!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சோ்ந்த ஏ.எல். இப்ராகிம்ஷா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்... மேலும் பார்க்க