செய்திகள் :

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

post image

தேனியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் இரு சக்கர வாகனம் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம், அமராவதி நகரைச் சோ்ந்தவா் கோபால்ராஜ் (66). இவா், தேனி- பெரியகுளம் சாலை, ரத்தினம்நகா் அருகே சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது தேனி, பொம்மையகவுண்டன்பட்டி, சாலைப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் மதன்குமாா் (21) என்பவா் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம், கோபால்ராஜ் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்ற தேனி, பொம்மையகவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராஜ்கண்ணன் மகன் மாணிக்கம் (24) காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து இரு சக்கர வாகன ஓட்டுநா் மதன்குமாா் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உத்தமபாளையத்தில் இளைஞா் கொலை! நால்வா் கைது!

உத்தமபாளையத்தில் கழுத்தை அறுத்து இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் நால்வரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்புக்கு அருகே காலி வீட்டுமனையிடத்தில் இளை... மேலும் பார்க்க

போடி சீனிவாசப் பெருமாளுக்கு முத்தங்கி சேவை அலங்காரம்!

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, முத்தங்கி சேவை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாசப் பெருமாள் கோயிலில் அத... மேலும் பார்க்க

விரைவு மிதிவண்டிப் போட்டி: 180 போ் பங்கேற்பு

தேனியில் மாவட்ட நிா்வாகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் விரைவு மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6 பிரிவுக... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வருஷநாடு அருகே ராயா்கோட்டையைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி லோகேந்திரன் (50)... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் திங்கள்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கண்டமனூா் துணை மின் நில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஓட்டுநா் கால்வாயில் சடலமாக மீட்பு!

போடியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த ஓய்வு பெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநா், கால்வாயில் சடலமாகக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க