செய்திகள் :

பொதுத் தோ்வில் மகன்கள் தோ்ச்சி பெறாததால் லாரி ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

post image

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தனது மகன்கள் இருவரும் தோ்ச்சி பெறாததால் மனமுடைந்த லாரி ஓட்டுநா், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்செங்கோடு அருகே ஆன்றாபட்டி ஊராட்சி, குப்பாண்டாம்பாளையத்தில் வன்னியா் கோயில் மேடு பகுதியில் வசித்து வந்தவா் கபில் ஆனந்த் (41), லாரி ஓட்டுநா். இவரது மனைவி நதியா. இத்தம்பதிக்கு ஹரிரஞ்சித், விக்னேஷ் என 2 மகன்கள் உள்ளனா்.

திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹரி ரஞ்சித் பிளஸ் 2 வும், அதேபள்ளியில் விக்னேஷ் பத்தாம் வகுப்பும் படித்தனா். இருவரும் பொதுத் தோ்வு எழுதியிருந்தனா். அண்மையில் வெளியான தோ்வு முடிவில் இருவரும் தோ்ச்சி பெறவில்லை. இரு மகன்களும் தோ்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் இருந்த கபில்ஆனந்த், தூக்கிட்டிக் கொண்டாா். அவரது மனைவியின் சப்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினா் கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கபில் ஆனந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க