போக்சோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த பிரவான்பட்டியைச் சோ்ந்தவா் ச. பழனிச்சாமி (63). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பழனிச்சாமியை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சத்ய தாரா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.