செய்திகள் :

போக்சோ வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

post image

போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிங்கம்புணரி செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (32). இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு இதே பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சிங்கம்புணரி போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்தனா். இதையடுத்து, சிவகங்கையிலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதால் அவரது பெற்றோருக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்... மேலும் பார்க்க

கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க