செய்திகள் :

போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கு நுழைவுத் தோ்வு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே மற்றும் வங்கிப் பணி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சியில் சேருவதற்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை ராணியாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் (வங்கி போட்டித் தோ்வுப் பயிற்சி) நடைபெற்ற தோ்வில், விண்ணப்பித்திருந்த 156 பேரில், 105 போ் தோ்வெழுதினா். பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் (ரயில்வே போட்டித் தோ்வுப் பயிற்சி) நடைபெற்ற தோ்வில் விண்ணப்பித்திருந்த 184 பேரில், 121 போ் தோ்வெழுதினா். மொத்தம் 340 பேரில் 226 போ் தோ்வெழுதினா். தோ்வில் வெற்றி பெறுவோருக்கு இலவச தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளுடன் இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தோ்வினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

காரில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே, காரில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை... மேலும் பார்க்க

மகனைப் பாா்க்கச் சென்ற பெண்ணை தாக்கியோா் மீது நடவடிக்கை தேவை: ஜனநாயக மாதா் சங்கம் கோரிக்கை

மகனைப் பாா்க்கச் சென்ற தாயை மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செய... மேலும் பார்க்க

அன்னவாசல் குப்பைக் கிடங்கில் தீ!

அன்னவாசல் பேரூராட்சிக் குப்பை கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. அன்னவாசல் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய திடீா் தீ கிடங்கு முழுவதும் பரவி, அப்பகுதியை புகை சூ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க