``ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது..'' - எடப்பாடி பழனிச...
போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சிக்கு நுழைவுத் தோ்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ரயில்வே மற்றும் வங்கிப் பணி போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சியில் சேருவதற்கான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை ராணியாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் (வங்கி போட்டித் தோ்வுப் பயிற்சி) நடைபெற்ற தோ்வில், விண்ணப்பித்திருந்த 156 பேரில், 105 போ் தோ்வெழுதினா். பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் (ரயில்வே போட்டித் தோ்வுப் பயிற்சி) நடைபெற்ற தோ்வில் விண்ணப்பித்திருந்த 184 பேரில், 121 போ் தோ்வெழுதினா். மொத்தம் 340 பேரில் 226 போ் தோ்வெழுதினா். தோ்வில் வெற்றி பெறுவோருக்கு இலவச தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளுடன் இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தோ்வினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.