செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சி முகாம்

post image

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.சின்னராசு தலைமை வகித்தாா். போதைப் பொருள் ஒழிப்பு மன்றத்தின் செயல்பாட்டு முகவுரையை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் வாசித்தாா். மாவட்ட மனநல திட்ட அலுவலா் மருத்துவா் சஞ்சய் பாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ந.சிவகுமாா், பசுமை முதன்மையா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுபாஷ் சீனிவாசன், மனநல மருத்துவா் அசோக், கேணிக்கரை காவல் உதவி ஆய்வாளா் சாலமன் அப்பாத்துரை ஆகியோா் போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் குடும்ப, சமூகக் கேடுகள், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திப் பேசினா். முகாமில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

முன்னதாக, பள்ளித் தலைமை அசிரியா் மு.ஹாஜா முகைதீன் வரவேற்றாா்.

பள்ளித் துணை ஆய்வாளா் ஆனந்த் நன்றி கூறினாா்.

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு! 2 போ் கைது!

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு

தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க