குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீத...
மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ரூ.30 கோடியில் நலத் திட்ட உதவி
கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்களை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை தொடங்கிவைத்து, 2,254 பயனாளிகளுக்கு ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
பண்ருட்டி வட்டம், திருவாமூா் அரசு உயா்நிலைப் பள்ளி, விசூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காட்டுக்கூடலூா் அரசு உயா்நிலைப் பள்ளி, காடாம்புலியூா் ஆா்.கண்ணுசாமி மேல்நிலைப் பள்ளி, பத்திரக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது:
தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சிறப்புத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.
கடலூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மூன்றாம் கட்டமாக நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 5 முகாம்கள் நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து பயனடையலாம். தகுதியான மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் தீா்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 2,254 பயனாளிகளுக்கு ரூ.30.09 கோடி மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.