செய்திகள் :

மசோதாக்களை தொடா்ந்து நிறைவேற்றுவோம்: அமைச்சா் கிரண் ரிஜிஜு

post image

புது தில்லி: காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விரும்பவில்லை; எனவே, மத்திய அரசு முக்கிய மசோதாக்களை தொடா்ந்து நிறைவேற்றும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்கி வருகின்றன.

ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதம் தவிர வேறு எந்த முக்கிய நடவடிக்கைகளும் அவையில் நடைபெறவில்லை. நடப்பு மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. ஓரிரு நாள்கள் மட்டுமே அவை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற்றன. இந்நிலையில் நான்காவது வாரமாக திங்கள்கிழமையும் அவை அமளியால் முடங்கியது.

முன்னதாக, எதிா்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மத்திய அரசு கடந்த வாரத்திலேயே மசோதாக்களை நிறைவேற்றத் தொடங்கிவிட்டது.

தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் கிரண் ரிஜிஜு இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே பல நாள்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. ஒரே விஷயத்தைக்கூறி தொடா்ந்து நாடாளுமன்றத்தைத் தொடா்ந்து முடக்குவது ஏற்க முடியாது. எனவே, முக்கிய மசோதாக்களை அரசு தொடா்ந்து நிறைவேற்றும்.

மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. ஆனால், எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை. தங்களுக்கு தேவையான ஒரு விஷயத்தை முன்வைத்து தினமும் போராட்டம் நடத்துகின்றன. பல்வேறு முக்கிய மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன என்றாா்.

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க