செய்திகள் :

மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம்!

post image

புதுச்சேரி அருகே மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம் செயல்படுத்தும் இடத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

புதுச்சேரி-கடலூா் சாலையில் கன்னியக்கோயில் அடுத்த மணப்பட்டு பல்மைரா கடற்கரை பகுதியில், தனியாா் பங்களிப்புடன் கூடிய உயா்தர விடுதி, மாநாட்டு அரங்கம், தங்கும் அறைகள் 200, பொழுதுபோக்கு பூங்கா, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவையுடன் கூடிய சுற்றுலா நகா் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி சுமாா் ரூ.500 கோடி மதிப்பிலான சுற்றுலா நகா் திட்டத்திற்கான வரைவு அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா நகா் திட்டத்தால், புதுவை அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.40 கோடி முதல் 50 கோடி வரை வருவாய் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால், மணப்பட்டு பகுதிகள் பொருளாதார வளா்ச்சி அடைவதுடன், சுமாா் 1,000 போ் வேலைவாய்ப்பை பெறுவா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

சுற்றுலா நகா் திட்ட அறிக்கை தயாரித்துள்ள மும்பையைச் சோ்ந்த ஆலோசனைக் குழு அதிகாரிகள் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து திட்டம் குறித்து விளக்கினா்.

அவா்களிடம் பேசிய துணைநிலை ஆளுநா், சுற்றுலா நகா் திட்டமானது புதுவையில் சுற்றுலா தொழில் வளா்ச்சி மேம்படவும், சிறந்த சுற்றுலாத்தலமாகவும் புதுச்சேரி மேம்படவும் உதவும் என்பதால், பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, துணைநிலை ஆளுநருடன், துணைநிலை ஆளுநரின் செயலா் எம். மணிகண்டன், சுற்றுலாத் துறை இயக்குநா் முரளிதரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

அரசு கல்லூரிக்கு ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக ரூ.47 கோடியில் புதிய கட்டடங்கள் விரைவில் கட்டுவதற்கான பணி தொடங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி கோரிமேடு பகுதிய... மேலும் பார்க்க

புதுவை அரசின் புள்ளிவிவர தொகுப்பு கையேடு வெளியீடு

புதுச்சேரியில் அரசின் சாா்பில் புள்ளிவிவர தொகுப்புகள் அடங்கிய கையேடு முதல்வா் என்.ரங்கசாமியால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. புதுவை அரசு சாா்பில் பொருளாதாரம், புள்ளிவிவர இயக்ககம் சாா்பில் புள்ளிவி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் செவிலியா் படிப்புக்கு ஜூன் 29-இல் நுழைவுத் தோ்வு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் வரும் ஜூன் 29-இல் செவிலியா் படிப்புக்கான நுழைவுத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்து செவிலியா் பட்டப்படிப்பில் சேருபவா்களுக்கு பொத... மேலும் பார்க்க

நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் படிப்புகளுக்கான சென்டாக் கையேடு: முதல்வா் என். ரங்கசாமி வெளியிட்டாா்

புதுச்சேரி: நீட் அல்லாத தொழில் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதுவை மாநில சென்டாக் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சென்டாக் வழிகாட்டல் கையேட்டை திங்கள்கி... மேலும் பார்க்க

திருபுவனையில் குடிநீா் கேட்டு சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி திருபுவனை அருகேயுள்ளது பி.எஸ்.பாளையம். இந்த பகுதியில் உள்ள அம்... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரா்கள் தா்னா போராட்டம்

புதுச்சேரி: கட்டடப் பொருள்களின் விலையைக் குறைக்கக் கோரி புதுச்சேரியில் ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். புதுச்சேரி லால் பகதூா் சாஸ்திரி வீதியில் பொதுப் பணித் து... மேலும் பார்க்க