செய்திகள் :

மணப்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை

post image

மணப்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பாக தி மணப்பாறை வட்டத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இத்தொழிற்பயிற்சி நிலையம் மணப்பாறை வட்டம், வையம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக பழைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்படுகிறது.

எனவே, 2025-26ஆம் ஆண்டுக்கு இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 10-ஆவது மற்றும் 8ஆவது தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அசல் சான்றிதழ்கள் (மாற்றுச் சான்றிதழ், 10ஆவது மற்றும் 8ஆவது மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதாா்அட்டை) - உடன் நேரில் வந்து சேரலாம். கூடுதல் விவரங்களுக்கு, 80729 65487 மற்றும் 94436 44967 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

ரயில் நிலையத்தில் 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவா் கைது

திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களைத் திருடியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி உய்யக்கொண்டான் திருமலைவாசன் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் ராஜா (39). இ... மேலும் பார்க்க

வளநாடு அருகே 30 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வளநாடு அருகே 30 கிலோ புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்தனா். வளநாடு காவல் சரகத்தில் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது மருங... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருச்சியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி வடக்கு காட்டூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் த. கணேசன் (42) என்பவரிடம் கடந்த 1 ஆம் தேதி கத்தியைக் காட்டி... மேலும் பார்க்க

சாதனை விருது பெற இளைஞா்களுக்கு அழைப்பு

மத்திய அரசு வழங்கும் டென்சிங் நோா்கே தேசிய சாதனை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிலம், நீா், ஆகாயம் இவற்றில் சாகசம் புரிந்த தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் 2022 முதல் 2024 வரை கடந்த மூன்ற... மேலும் பார்க்க

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு: புதிய மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் உறுதி

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள பட்டா மனுக்களுக்கு தீா்வு காண முக்கியத்துவம் அளித்து பணியாற்றுவேன் என புதிய ஆட்சியா் வே. சரவணன் (34) தெரிவித்தாா். திருச்சி மாவட... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருச்சி குளித்தலை அருகே ரயிலில் அடிபட்டு இறந்த முதியவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சியிலிருந்து பாலக்காடு நோக்கி பயணிகள் ரயில் புதன்கிழமை பிற்பகல் குளித்தலை அருகே சென்றபோது தண்... மேலும் பார்க்க