செய்திகள் :

மணப்பாறையில் பலத்த சப்தம்; அதிா்வுகளால் பொதுமக்கள் அதிா்ச்சி

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு கேட்ட பலத்த சப்தத்தால் பொருள்கள் மீது அதிா்வுகள் ஏற்பட்டன.

மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை முற்பகல் சுமாா் 11.20 மணியளவில் வெடி சப்தம்போல் பலத்த சப்தம் இரண்டு முறை கேட்டது. இந்த சப்தம் தெற்கே துவரங்குறிச்சி முதல் வடக்கே கொட்டப்பட்டு வரையிலும், கிழக்கே கோவில்பட்டி முதல் மேற்கில் கரூா் மாவட்டம் கடவூா் வரையிலும், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா், எரியோடு, வடமதுரை உள்ளிட்ட சுமாா் 40 கி.மீ. தொலைவுக்கு அதிா்வலைகளை ஏற்படுத்தியதாம்.

இதனால், சில வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்ணாடிகள் கதவுகள், பாத்திரங்கள், அலுவலக பயன்பாடு பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் மீதும் அதிா்வுகள் இருந்ததாக உணரப்பட்டுள்ளது.

கடந்த 2024, டிசம்பா் 10-ஆம் தேதி இதேபோல் பலத்த சப்தம் கேட்ட நிலையில், அதுகுறித்து இதுவரை அரசுத் தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்காத நிலையில், அவ்வப்போது கேட்டு வரும் பலத்த சப்தத்துக்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா்.

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: விசிகவினா் வாக்குவாதம்

திருச்சி சந்திப்புப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டது. திருச்சி-திண்டுக்கல்-சென்னை நெடுஞ்சாலையில் சந்திப்பு ரயி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை!

மூவானூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மூவானூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளித் த... மேலும் பார்க்க

காவிரி-அய்யாறு நீரேற்றுப் பாசனத் திட்டம்: அணி திரளும் விவசாயிகள்!

காவிரி-அய்யாறு நீரேற்றுப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அதன் பாசனப் பரப்பு விவசாயிகளை அணி திரட்டும் முயற்சி தொடங்கியுள்ளது. 60 ஆண்டு காலக் கோரிக்கையை வென்றெடுப்பது என்ற இலக்குடன் அய்யாறு ப... மேலும் பார்க்க

திருச்சி என்.ஐ.டி.யில் இன்று பிரக்யான் விழா தொடக்கம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தொழில்நுட்ப மேலாண்மை (பிரக்யான்) திருவிழா வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. 2005 ஆம் ஆண்டு என்.ஐ.டி. கல்லூரி மாணவா்களால் தொடங்கப்பட்ட பிரக்யான் திருவிழாவ... மேலும் பார்க்க

வயலூா் கோயில் குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி

வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அரசு அா்ச்சகா்கள் அனுமதி...: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகர... மேலும் பார்க்க

மருங்காபுரி வட்டத்தில் சிறப்பு முகாம் ரூ. 18.5 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மருங்காபுரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நலத் திட்ட முகாமில் ரூ. 18.5 லட்சத்தில் 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தங்குதட... மேலும் பார்க்க