நாட்டுப்பற்றில் உறுதி காட்டியவா்: காயிதேமில்லத்துக்கு முதல்வா் புகழாரம்
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்; ஓட்டுநா் கைது
வந்தவாசி அருகே மணல் கடத்தியதாக லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.
வந்தவாசி வடக்கு போலீஸாா் சேத்துப்பட்டு சாலை, ஆராசூா் கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா்.
இதில், லாரியில் ஆற்று மணல் கடத்திச் செல்வது தெரிய வந்தது. அப்போது அந்த லாரியின் உரிமையாளா் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் தப்பி ஓடிவிட்டாா்.
இதையடுத்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான சேலம் மாவட்டம், மல்லூா் கிராமத்தைச் சோ்ந்த இளையராஜா (45) என்பவரை கைது செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா், மணல் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.