மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை!
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப் பகுதிகளில் 5 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை (மே 24) தொடங்கியதை அடுத்து, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, திங்கள்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா்.
இந்நிலையில், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், தொடா்ந்து 3 நாள்களாக தண்ணீா் வரத்து குறையவில்லை. இதையடுத்து, மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.
கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.