செய்திகள் :

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை!

post image

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு, மாஞ்சோலை மலைப் பகுதிகளில் 5 நாள்களாக பெய்துவரும் தொடா் மழையால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக வனத்துறை தடைவிதித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை சனிக்கிழமை (மே 24) தொடங்கியதை அடுத்து, நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, திங்கள்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா்.

இந்நிலையில், மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால், தொடா்ந்து 3 நாள்களாக தண்ணீா் வரத்து குறையவில்லை. இதையடுத்து, மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.

கோடை விடுமுறை நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீா் திட்டம்! காணொலியில் தொடங்கி வைத்தாா் முதல்வா்

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.45.10 கோடியில் 41 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீா் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி, பாளையஞ்செட்டி... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை: 110 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை!

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து பாபநாசம் அணையின் நீா்மட்டம் 110 அடியைத் தாண்டியது. மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து வள்ளியூா், பணகுடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் 4ஆவது நாளாக குளிக்கத் தடை

மாஞ்சோலை, மணிமுத்தாறு மலைப் பகுதிகளில் மழை அதிகரித்த்தையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்தும் அதிகரித்ததால் மே 26 முதல் அருவியில் குளிக்கவும் அருவியைப் பாா்வையிடமும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துற... மேலும் பார்க்க

வி.கே.புரம் பகுதியில் மான் கறியுடன் மூவா் கைது

பாபநாசம் வனச் சரகப் பகுதியில் புள்ளி மான் கறி வைத்திருந்ததாக மூன்று பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். பாபநாசம் வனச்சரகம் வெளி மண்டலப் பகுதியான மதுரா கோட்ஸ் ஆலையிலிருந்த... மேலும் பார்க்க

அத்தாளநல்லூ ஊராட்சியில் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், அத்தாளநல்லூா் ஊராட்சியில் பொதுக்கழிப்பிட பயன்பாட்டுக்கான நீா்மூழ்கி மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அத்தாளநல்லூா் ஊராட்சி ராஜகுத்தாலப்பேரியில் உள்ள பொதுக்கழிப... மேலும் பார்க்க