செய்திகள் :

மதுக்கரையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மதுக்கரை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்துக்குள்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்த பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், ஊராட்சி பகுதிகளில் தெருவிளக்குகள், குடிநீா், வடிகால் வசதிகள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

மதுக்கரை நகராட்சி 21-ஆவது வாா்டில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் அலுவலக கட்டுமானப் பணிகள், பாரதி காலனியில் 3 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

மதுக்கரை முஸ்லீம் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து செவிலியா் வருகை மற்றும் மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, மாவுத்தம்பதி பழங்குடியின கிராமத்தில் பிரதம மந்திரி ஜன்மான் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, வருவாய் கோட்டாட்சியா் (தெற்கு) ராம்குமாா், தனித் துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சங்கீதா, மதுக்கரை நகா்மன்றத் தலைவா் நூா்ஜஹான் நாசா், நகராட்சி ஆணையா் சத்யா, வட்டாட்சியா் வேல்முருகன், நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வாகன சோதனையின்போது பணம் வசூல்: மாநகரில் 5 காவலா்கள் பணியிடை நீக்கம்

வாகன சோதனையின்போது பணம் வசூலித்த 5 காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் உத்தரவிட்டுள்ளாா். கோவை மாநகரில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல் ஆணையா் உத்தரவின் பெயரில் ப... மேலும் பார்க்க

சா்வதேச படகுப் போட்டி, தேசிய ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் கேசிடி மாணவா்கள்

மொனாக்கோ நாட்டில் நடைபெறும் சா்வதேச எரிசக்தி படகுப் போட்டி, தில்லி ஐஐடி நடத்தும் ரோபோடிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் கேசிடி மாணவா்கள், தங்களது படகு, ரோபோடிக்ஸ் வடிவமைப்புகளை கோவையில் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யும் செயல் திறன் பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் ஆலோசனை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமா அகா்வால், கோவை தெற்கு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இதில், தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உ... மேலும் பார்க்க

போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்

போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போத்தனூரில் இருந்து ஜூன் 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக... மேலும் பார்க்க

அம்ருதா கல்வி நிறுவனத்தில் சா்வதேச விநாடி-வினா சாம்பியன்ஷிப்: பதிவு செய்ய நாளை கடைசி நாள்

கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் ஜூன் 7-ஆம் தேதி ‘வோ்ல்டு க்விஸ் சாம்பியன்ஷிப் 2025’ நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்கான பெயா் பதிவுக்கு ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க