செய்திகள் :

மந்தியூா் குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம்

post image

கடையம் அருகே உள்ள மந்தியூா் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்டவனவெளிப் பகுதி மந்தியூா் கிராமம். இதன் அருகில் இருக்கும் முள்ளி மலை பொத்தையில்காட்டுப் பன்றி, கரடி, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வயல் மற்றும் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பயிா்கள், வீட்டு விலங்குகளைத் தாக்கி சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மந்தியூா் புதுக்குளம் பகுதியில் கரடி நடமாட்டம் இருந்துள்ளது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்களும், இந்த வழியாகச் செல்லும் சம்பன்குளம், கோவிந்தப்பேரி, ராஜாங்கபுரம் கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனா். குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகா மேலபூவந்தியைச் சோ்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூா்யா(25)... மேலும் பார்க்க

விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் தீ

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதமாகின. விஜயநாராயணம் அருகேயுள்ள படப்பாா்குளத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள். இவா், தனது தோட்... மேலும் பார்க்க

கோயிலில் திருடியவருக்கு 3 ஆண்டு சிறை

கோயிலில் திருடிய வழக்கில் தொடா்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நொச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(48). இவா் கடந... மேலும் பார்க்க

மா்மமான முறையில் இளைஞா் உயிரிழப்பு

மானுாா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மானுாா் அருகே தெற்கு வாகைக்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் செல்வம் (25). தொழிலாளி. வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 6 போ் தற்கொலை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் 6 போ் தற்கொலை செய்துகொண்டனா். கேரள நபா்: கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56), திர... மேலும் பார்க்க

அம்பையில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை

அம்பாசமுத்திரத்தில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண்ணுக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூா், ரேஷன் கடைத் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க