மயிலாடுதுறையில் ரூ.3.90 கோடியில் கோட்டாட்சியா் அலுவலக கட்டடம்
மயிலாடுதுறையில் ரூ. 3.90 கோடியில் கட்டப்படவுள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலக புதிய கட்டடத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்) முன்னிலை வகித்தனா்.
தமிழக உயா்கல்வி துறை அமைச்சா் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினா்.
தரைத்தளத்தில் 4203.93 சதுர அடி, முதல்தளத்தில் 4203.93 சதுர அடி என மொத்தம் 8407.87 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன் இக்கட்டடம் அமையவுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி, வருவாய் கோட்டாட்சியா் (பொ) உ. அா்ச்சனா, நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஸ்ரீதேவி நா்மதா ஆகியோா் கலந்து கொண்டனா்.