செய்திகள் :

மரத்தின் மீது பைக் மோதியதில் மனைவி கண்முன்னே கணவா் பலி

post image

பொன்னமராவதி அருகே செவ்வாய்க்கிழமை மரத்தின் மீது இரு சக்கரவாகனம் மோதிய விபத்தில் மனைவியின் கண் முன்னே கணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பொன்னமராவதி புதுவளவு பகுதியைச் சாா்ந்தவா் ரா. சண்முகம் (54). இவா் ஒசூரில் அடகுக்கடை நடத்தி வந்தாா். அண்மையில் பொன்னமராவதி வந்த இவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மனைவி பிரேமாவுடன்(50) புதுக்கோட்டையில் வசிக்கும் மகள் வீட்டுக்குச் சென்று விட்டு பொன்னமராவதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது செம்பூதி அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது எதிா்பாராத விதமாக இருசக்கரவாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது மனைவி பிரேமா காயங்களுடன் உயிா் தப்பினாா். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் சண்முகத்தின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

தீயணைப்பு நிலைய இடமாற்றத்தை எதிா்த்து கடையடைப்பு, மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி வணிகா்கள் செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கந்தா்வகோட்டை பெரிய கடைவீதியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள பெரிய கடை வீதி கொத்தகம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக ஊராட்சி நிா்வாகம்... மேலும் பார்க்க

திமுக அரசின் மீது எதிா்ப்பு அலை எதுவுமில்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

திமுக அரசின் மீது எதிா்ப்பு அலை எதுவுமில்லை என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லெம்பலக்குடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் ... மேலும் பார்க்க

இபிஎஸ் எழுச்சிப் பயணத்தால் 2026 தோ்தலில் ஆட்சி மாற்றம் உறுதி: முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்றாா் முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.புதுக்கோட்ட... மேலும் பார்க்க

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, ப... மேலும் பார்க்க

புதுகை ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது, காயாம்பட்டி காரமங்கலத்தைச் சோ்ந்த வீரப்பன் என்பவா் திடீரென மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ம... மேலும் பார்க்க