செய்திகள் :

மழையால் வீடுகளை இழந்தவா்களுக்கு முத்தூட் நிறுவனம் சாா்பில் புதிய வீடுகள் வழங்கல்

post image

தூத்துக்குடி, நெல்லையில் கடந்த 2023 இல் மழையால் வீடுகளை இழந்த 11 பேருக்கு முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி, திருநெல்வேலியில் கடந்த 2023 இல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 11 பேருக்கு முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் புதிதாக வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளது. முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் சமூக பொறுப்பு பங்களிப்பாக (சி.எஸ்.ஆா்.) தனது முத்தூட் ஆஷியானா திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகளைக் கட்டி கொடுத்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 270 வீடுகளை இந்நிறுவனம் கட்டி கொடுத்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மட்டும் 11 வீடுகள் ரூ. 1 கோடி செலவில் கட்டி கொடுத்துள்ளது.

வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முத்தூட் குழும நிறுவனங்களின் தலைவா் ஜாா்ஜ் ஜேக்கப், முத்தூட் நிதித்துறை துணை நிா்வாக இயக்குநா் ஜாா்ஜ் முத்தூட் ஜேக்கப் ஆகியோா் கலந்துகொண்டு பயனாளிகளிடம் வீட்டு சாவிகளை வழங்கினா். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஊா்வசி அமிா்தராஜ் பங்கேற்றுப் பேசுகையில், முத்தூட் நிறுவனத்தின் செயல் பாராட்டுக்குரியது. இந்நிறுவனம் தொடா்ந்து உதவ வேண்டும் என்றாா்.

முத்தூட் நிறுவனத் தலைவா் ஜாா்ஜ் ஜேக்கப் முத்தூட் பேசுகையில், ‘எங்கள் நோக்கம் தங்குமிடம் வழங்குவது மட்டுமல்ல; மாறாக அனைத்தையும் இழந்த மக்களுக்கு பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மை உணா்வையும் உருவாக்குவதே ஆகும். சமீபத்திய வீடுகளின் தொகுப்புடன், 2025 நிதியாண்டில் மட்டும் முத்தூட் நிதி நிறுவனம் ரூ. 102.9 கோடியை இந்த நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டுள்ளது’ என்றாா் அவா்.

திருச்செந்தூா் - சென்னை மேலும் ஒரு ரயில்: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமென காயல்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பாா்வையிட, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேல... மேலும் பார்க்க

தோ்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அறிவுறுத்தல்

தோ்தல் செலவின அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவு பெற்ற அரசியல் க... மேலும் பார்க்க

கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. சங்கு குளி தொழிலாளியான ... மேலும் பார்க்க

முக்காணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை மிதந்துவந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். முக்காணி பிள்ளையாா் நகா் அருகே தாமிரவருணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்து... மேலும் பார்க்க

தசரா குழு செயலருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தசரா குழு செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.தட்டாா்மடம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தமிழ்வீரன் (55) என்பவா்... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கழுகுமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.கழுகுமலை அருகே அழகப்பாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் (27). உணவகத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கழுக... மேலும் பார்க்க