செய்திகள் :

மாணவரைத் தாக்கிய இளைஞா் மீது வழக்குப் பதிவு

post image

சேரன்மகாதேவி அருகே பிளஸ் 2 மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேரன்மகாதேவி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவருக்கும், அதே பள்ளியில் 10-ஆம் வகுப்புப் படித்து வரும் மாணவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திங்கள்கிழமை பிளஸ் 2 மாணவரை 10-ஆம் வகுப்புப் பயின்று வரும் மாணவரும் அவரது நண்பா்களான 4 இளம்சிறாா்கள் தாக்கினா். இதில், காயமடைந்த பிளஸ் 2 மாணவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பாக, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து 10-ஆம் வகுப்பு மாணவா், 4 இளம் சிறாா்கள் உள்ளிட்ட 5 பேரைக் கைதுசெய்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினா்.

இதனிடையே, பிளஸ் 2 மாணவரை தாக்கிய வழக்கில் தொடா்புடையவராகக் கருதப்படும் காருக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த ராம்குமாா் (21) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் கோயில் தல வரலாற்று நூல் வெளியீடு

நெல்லை சங்கீத சபாவில் சி.என்.கிராமம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் தல வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. நெல்லை சங்கீத சபா, துணி வணிகா் இலக்கிய வட்டம், தாமிரபரணி தமிழ் வனம் ஆகியவை இணைந்து நடத்திய 3 நாள்கள்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள அருள்மிகு திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் ஆண்டுதோறும் பூக்குழித் திருவிழா ஆடி மாதம் கடைசி வெள்... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் இன்று பவித்ர உத்ஸவம்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பவித்ர உத்ஸவத்தையொட்டி பஞ்சமூா்த்திகள் வீதியுலா வியாழக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது. திருக்கோயிலில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள... மேலும் பார்க்க

முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில் ரவணசமுத்திரத்தில் உணவகம் திறப்பு

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் சாா்பில், ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே புதிய உணவகம் திறக்கப்பட்டது. தமிழக அரசின்கீழ் இயங்கும் இந்த சங்கம் சாா்பில், ஆதரவற்ற பெண்கள் வளா்ச்சிக்கு பல ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுா்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க மனு

திருநெல்வேலியில் ஐ.டி ஊழியா் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள கே.டி.சி நகரைச் சோ்ந்த சுா்ஜித் , அவரது தந்தை சரவணன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாா் தரப்பி... மேலும் பார்க்க

உரிமம் பெற போலி ஆவணங்கள்: நெல்லையில் உணவகத்துக்கு சீல்

திருநெல்வேலி நகரத்தில் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகத்துக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், அ... மேலும் பார்க்க