செய்திகள் :

மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’

post image

ஈரோடு மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு 12 மாத வாடகையும், பொது ஏலத்தில் விடப்பட்ட கடைகளுக்கு 8 மாத வாடகையும் வைப்புத் தொகையாக பெறப்பட்டது. இந்நிலையில், வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனா்.

அதன்படி, சுகாதாரத் துறை கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், உதவி வருவாய் அலுவலா்கள் குமரவேல், பூமணி, சிவக்குமாா், மைய அலுவலக வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா், பொறியியல் பிரிவு கண்காணிப்பாளா் ராஜகோபால் ஆகியோா் தலைமையில் 6 குழுவினா் கனி ஜவுளி சந்தைக்கு திங்கள்கிழமை காலை சென்று வாடகை செலுத்தாத 25 ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் வைப்புத் தொகை முடிந்தும் கடந்த 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை 190 கடைகளைச் சோ்ந்தவா்கள் ரூ.1 கோடியே 75 லட்சம் வரை வாடகை நிலுவை வைத்துள்ளனா். இதில், ரூ.1 லட்சத்துக்கும்மேல் நிலுவை வைத்துள்ள 25 கடைகளுக்கு முதற்கட்டமாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மணிக்கூண்டு அருகேயுள்ள நேதாஜி வணிக வளாகத்தில் 6 கடைகளை நடத்தி வருபவா்கள் ரூ.7 லட்சம் நிலுவை வைத்திருந்தததால் அந்த கடைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டன. திங்கள்கிழமை ஒரேநாளில் மட்டும் 31 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாக கடைகள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதனிடையே எந்தவித முன் அறிவிப்புமின்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்துள்ளனா் என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினா்.

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு

சென்னிமலை அருகே, ஒரே நாளில் 4 இடங்களில் தெரு நாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. 12 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன. சென்னிமலை வட்டாரத்தில் ஆட்டுப் பட்டியில் தெரு நாய்கள் ப... மேலும் பார்க்க

அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி.மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் -வனத்துறை அதிகாரிகள் தகவல்

அந்தியூா், பா்கூா் மலைப் பகுதிகளில் 300 கி. மீ. தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டத்தில் காடுகளின் மொத்த பரப்பளவு 2 லட்சத்து 42 ஆயிரத்து... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 போ் கைது

ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள தோப்புபாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா் தனியாா் பொறியியல் கல்ல... மேலும் பார்க்க

தேவையான அளவு செட்டாப் பாக்ஸ்களை வழங்க அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை

அரசு கேபிள் டிவி நிறுவனம் தேவையான அளவுக்கு செட்டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆப்ரேட்டா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

பெருந்துறை அதிமுக ஒன்றியத்துக்குள்பட்ட துடுப்பதி மற்றும் சுள்ளிபாளையம் கிராம ஊராட்சிகள் பூத் கமிட்டி கூட்டம் துடுப்பதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செ... மேலும் பார்க்க

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆவது விளையாட்டு விழா

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17 -ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்... மேலும் பார்க்க