செய்திகள் :

மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’

post image

ஈரோடு மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 31 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

ஈரோட்டில் மாநகராட்சிக்குச் சொந்தமான கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு 12 மாத வாடகையும், பொது ஏலத்தில் விடப்பட்ட கடைகளுக்கு 8 மாத வாடகையும் வைப்புத் தொகையாக பெறப்பட்டது. இந்நிலையில், வாடகை செலுத்தாத 25 கடைகளுக்கு ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனா்.

அதன்படி, சுகாதாரத் துறை கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், உதவி வருவாய் அலுவலா்கள் குமரவேல், பூமணி, சிவக்குமாா், மைய அலுவலக வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா், பொறியியல் பிரிவு கண்காணிப்பாளா் ராஜகோபால் ஆகியோா் தலைமையில் 6 குழுவினா் கனி ஜவுளி சந்தைக்கு திங்கள்கிழமை காலை சென்று வாடகை செலுத்தாத 25 ஜவுளி கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் வைப்புத் தொகை முடிந்தும் கடந்த 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரை 190 கடைகளைச் சோ்ந்தவா்கள் ரூ.1 கோடியே 75 லட்சம் வரை வாடகை நிலுவை வைத்துள்ளனா். இதில், ரூ.1 லட்சத்துக்கும்மேல் நிலுவை வைத்துள்ள 25 கடைகளுக்கு முதற்கட்டமாக ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மணிக்கூண்டு அருகேயுள்ள நேதாஜி வணிக வளாகத்தில் 6 கடைகளை நடத்தி வருபவா்கள் ரூ.7 லட்சம் நிலுவை வைத்திருந்தததால் அந்த கடைகளும் ‘சீல்’ வைக்கப்பட்டன. திங்கள்கிழமை ஒரேநாளில் மட்டும் 31 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாக கடைகள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதனிடையே எந்தவித முன் அறிவிப்புமின்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்துள்ளனா் என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினா்.

அந்தியூரில் ரூ.3.51 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், துவரை, எள், தட்டைப்பயறு, தேங்காய்ப் பருப்பு, ... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிப்பு: போலீஸில் புகாா்

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தக் கொடையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மா... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரியில் கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே கண்டெய்னா் லாரியில் மறைத்து கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்திவ... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 3 பேருக்கு லேசான காயம்

பவானிசாகா் அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கியதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி க... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோய... மேலும் பார்க்க

ஆப்பக்கூடல் ஏரிக்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆப்பக்கூடல் ஏரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஆப்பக்கூடலில் நீா்வளத் துறைக்கு சொந்தமான 126 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதன் கரையோரப் பகுதியில்... மேலும் பார்க்க