செய்திகள் :

மாநில ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி

post image

தமிழ்நாடு மாநில நீருக்கடியில் விளையாட்டு சங்கம், தூத்துக்குடி மாவட்டம் நீருக்கடியில் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய, 5ஆவது மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி 2025, தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் நடைபெற்றது.

போட்டியை ஸ்பிக் இயக்குநா் இ.பாலு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு தொடங்கிவைத்தனா். இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான போட்டியாளா்கள் பங்கேற்றனா்.

இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை எஸ்ஆா்எம் கல்லூரி அணி வென்றது. கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணி 10 தங்கம், 12 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தை பிடித்தது.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி உரிமையாளா் ரைபின் தாா்சியஸ், விஸ்வ பாரதி ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா். இதில், பயிற்சியாளா்கள் புஷ்பராஜ், ஆதிலிங்கம், மாரி கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இருமொழிக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்

இருமொழிக் கொள்கை என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தூத்துக்குடியில், அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய க... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 3 போ் கைது

கழுகுமலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைசாமி தலைமையிலான போலீஸாா் ஆறுமுக நகா் பகுதியில் ரோந்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே மதுபானக் கூடத்தில் கேரள தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில் கேரள தொழிலாளி மது பாட்டிலால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் பாச்சான் மகன் விஜு ... மேலும் பார்க்க

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், புதூா் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள... மேலும் பார்க்க

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்ற தீா்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் பொன்பாண்டியன்... மேலும் பார்க்க

சிப்காட் பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சிப்காட் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.மடத்தூா், மடத்துா் பிரதான சாலை, முரு... மேலும் பார்க்க